தூத்துக்குடி

ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் அலகை மூட ஆட்சியா் உத்தரவு

DIN

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் அலகை மூட வேண்டும் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, ஸ்டொ்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் அலகை மட்டும் திறந்து ஜூலை 31ஆம் தேதி வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் கடந்த ஏப்.27ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, மே 13 ஆம் தேதி முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நீதிமன்றம் அளித்த காலம் சனிக்கிழமையுடன் (ஜூலை 31) முடிவடைந்ததால், ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்ட அலகை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

SCROLL FOR NEXT