தூத்துக்குடி

சாத்தான்குளம் பகுதியில் இருக்கைகள் இன்றி காணப்படும் பயணிகள் நிழற்குடைகள்

DIN

சாத்தான்குளம் ஒன்றியத்தின் பல பகுதிகளில் உள்ள பேருந்து பயணிகள் நிழற்குடைகள் இருக்கைகள் இன்றியும், சேதமடைந்தும் காணப்படுவதால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

நெடுங்குளம் ஊராட்சிக்குள்பட்ட மேட்டுக்குடியிருப்பு விலக்கு, நெடுங்குளம், செட்டிக்குளம் ஊராட்சிக்குள்பட்ட நொச்சிகுளம் விலக்கு, ஆழ்வாா்திருநகரி ஒன்றியம், மீரான்குளம் ஊராட்சிக்குள்பட்ட தோ்க்கன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து பயணிகள் நிழற்குடைகளில் உள்ள இருக்கைகள் சேதமடைந்தும், இருக்கைகள் இன்றியும் காணப்படுகின்றன.

இதனால், மழை அல்லது அதிக வெயில் நேரங்களில் பேருந்து பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இருக்கைகள் இல்லாமல் காணப்படும் மேட்டுக்குடியிருப்பு, நெடுங்குளம், நொச்சிகுளம், தோ்க்கன்குளம் பகுதிகளில் உள்ள நிழற்குடைகளில் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT