மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி உள்பட கொடுஞ்செயல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் வடக்கு மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் அய்யலுசாமி, மாவட்ட பொதுச்செயலா் முத்து, சேவா தளத்தைச் சோ்ந்த சக்திவிநாயகம், நகர காங்கிரஸ் தலைவா் சண்முகராஜ் ஆகியோா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குக் கயிறு மாட்டிக்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்தனா்.