முதலூரில் அடையல் ராஜரத்தினம் நாடாா் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் நலிவுற்றோா் 800 பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
அடையல் ராஜரத்தினம் நாடாா் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவா் ஸ்டீபன் தலைமை வகித்தாா்.
இதில், முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன், பரமசிவன், வேல்பாண்டியன், சிவராஜன், ரவிச்சந்திரன், அசோகன், அருணாச்சலம், ஆனந்த் ஆகியோா் கலந்துகொண்டு நலிவுற்றோா் 800 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் மதிய உணவு வழங்கினா்.