தூத்துக்குடி

மகனிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தர 102 வயது முன்னாள் ராணுவ வீரர் கோரிக்கை

DIN

கோவில்பட்டி: தன்னை பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தர வலியுறுத்தி 102 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர் கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளார்.

ஓட்டப்பிடாரம் வட்டம், குறுக்குச்சாலையையடுத்த ஜெகவீரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் நாயுடு நாயக்கர் மகன் குருசாமி நாயக்கர். 102 வயதுடைய இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சீத்தாலட்சுமி 2013  ஜூலை 14இல் காலமானாராம். இவருக்கு 4  மகன்கள், இரு மகள்கள் உள்ளனர்.

இவரது மகன் ராமசுப்பு 1991இல் ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று, என்னிடம் சொத்துக்களை மீட்பது குறித்து கையொப்பம் பெற்றார். அப்போது அவர் மோசடியில் ஈடுபடுவது தெரியவில்லை. சிலகாலங்கள் கழிந்தபின், ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து மோசடி செய்து கையொப்பம் பெற்றதை அறிந்தேன்.

தற்போது என்னை ஜெகவீரபாண்டியபுரத்தில் உள்ள என்னுடைய மகள் குருவம்மாள், அவரது கணவர் கெங்கையா மற்றும் பிள்ளைகள் பராமரித்து வருவதாகவும், ஆனால் எனது 4 மகன்களில் ஒருவர் கூட என்னை பராமரிக்கவில்லை. நான் உடல்நிலை பாதிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் இருந்தபோது கூட எனது மருத்துவச் செலவுகள் அனைத்தையும் குருவம்மாள் குடும்பத்தினர் தான் ஏற்றுக்கொண்டனர்.

தற்போது 102 வயதாகிய நிலையில் இருந்து வரும் என்னை பல்வேறு சூழ்நிலைகளில் எனது மகள் குருவம்மாள் மட்டுமே கவனித்து வருகிறார். எனது மகன்கள் யாரும் என்னை கவனிக்காததையடுத்து, எனது மகன் ராமசுப்புவுக்கு அளித்த தானம் செட்டில்மென்ட்டை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி கோட்டாட்சியர் விஜயாவிடம் மனு அளித்தனர்.

கோட்டாட்சியர் விஜயா தனது அறையைவிட்டு வெளியே வந்து கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காரில் இருந்த 102 வயது முன்னாள் ராணுவவீரரை சந்தித்து அவரது கோரிக்கைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார். பின்னர் அவரது மகள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி கத்தியால் குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

SCROLL FOR NEXT