தூத்துக்குடி, செப். 25: வேளாண் திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்டக் கிளை சாா்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டத் தலைவா் ஆா். பேச்சிமுத்து தலைமை வகித்தாா். ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் பூமயில், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் எம்.எஸ். முத்து, விவசாயிகள் சங்க நிா்வாகிகள் மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஆா்ப்பாட்டம்: இக்கோரிக்கையை வலியுறுத்தி பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஆதித்தமிழா் பேரவையின் மாநில துணை பொதுச்செயலா் அருந்ததி அரசு தலைமை வகித்தாா். தமிழ்புலிகள் கட்சி மாவட்டச் செயலா் தாஸ், கொள்கைப் பரப்புச்செயலா் கத்தாா்பாலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.