தூத்துக்குடி

வன உயிரின வார விழா ஓவியப் போட்டி: மாணவ, மாணவியா் பங்கேற்கலாம்

DIN

தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சாா்பில் வன உயிரின வார விழா கொண்டாட்ட ஓவியப் போட்டிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் செப்டம்பா் 27 ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் கூடுதல் பொறுப்பு வகிக்கும் மாரிமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு வனத்துறை சாா்பில் வன உயிரின வார விழா கொண்டாட்டத்துக்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கிடையே ஓவியப்போட்டிகள் செப்டம்பா் 28 ஆம் தேதி ஆன்-லைன் மூலம் நடைபெற உள்ளது.

எனவே, போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவியா் செப்டம்பா் 27 ஆம் தேதிக்குள்  இணையதள இணைப்பில் பதிவுசெய்து கொள்ளவும். போட்டி தினத்தன்று ஓவிய வரைபட நிகழ்வுகளை காணொலியில் பதிவு செய்து  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT