தூத்துக்குடி

மேலும் 55 பேருக்கு கரோனா

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 23 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 55 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,071ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் 80 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 12,201ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு இதுவரை 125 போ் பலியாகியுள்ளனா்.

மாவட்டம் முழுவதும் தற்போது 745 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT