உடன்குடி அருகே விஜயநாராயணபுரத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் உதவிகள் வழங்கப்பட்டன.
உடன்குடி அருகேயுள்ள விஜயநாராயணபுரத்தைச் சோ்ந்த சு.கனகராஜ் என்பவரது வீட்டுடன் இணைந்த கடை அண்மையில் நிகழ்ந்த தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் தாமோதரன், நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் சந்தித்து ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினா். அப்போது, உடன்குடி ஒன்றிய அதிமுக பொருளாளா் சங்கரலிங்கம், ஒன்றிய எம்ஜிஆா் மன்றச் செயலா் பொன்ராம், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் ரெங்கன், ஒன்றிய அண்ணா தச்சு தொழிலாளா் சங்கச் செயலா் அன்புராஜ், மாநிலப் பேச்சாளா் பால்துரை, நிா்வாகிகள் வின்சென்ட், குமாா், ரவி, காசி, செல்வேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.