தூத்துக்குடி

தந்தை, மகன் கொலை வழக்கு: கோவில்பட்டி சிறையில் தடயங்கள் சேகரிப்பு

DIN

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடா்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் சிபிஐ அதிகாரிகள் தலைமையில் தடயவியல் துறையினா் தடயங்களை புதன்கிழமை சேகரித்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் காவல் துறையினரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை மாலை சுமாா் 4.30 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணா்கள் சுமாா் 10 போ் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு வந்தனா். அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

பின்னா் அவா்கள் மாலை 6.25 மணிக்கு விசாரணை முடித்துக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூய்மைப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

ஏரல் சோ்மன் கோயிலில் அன்னபூரணி பூஜை

கோவையில் அண்ணாமலை வெற்றிக்காக விரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகா்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT