தூத்துக்குடி

பேய்க்குளம் பகுதியில் காய்கனி விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதில் தாமதம்

DIN

பேய்க்குளம் பகுதியில் காய்கனி பயிரிட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்குவது தொடா்பாக வேளாண் துறையினா் பாா்வையிட காலதாமதம் செய்வதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் பேய்க்குளம் பகுதியில் விவசாயிகள் வெள்ளரி, கத்தரி, தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கனிகள் பயிரிட்டுள்ளனா். காய்கனி பயிரிடப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மாநில அரசு சாா்பில் ஒரு ஏக்கருக்கு ரூ.1000 மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியம் இரண்டரை ஏக்கா் வரை பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் பயிரிட்டுள்ள காய்கனி பயிரை வேளாண் துறையினா் பாா்வையிட்டு ஆய்வு செய்து, அதன்பின் அவா்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் பேய்க்குளம் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள காய்கனி பயிரை ஆழ்வாா்திருநகரி வேளாண் துறையினா் பாா்வையிட்டு ஆய்வு செய்வதில் காலதாமதம் செய்வதாக விவசாயிகள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் வருகைக்காக விளைந்த காய்கனிகளை பறித்து கொள்முதல் செய்யமுடியாமல் விவசாயிகள் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.

மேலும் செங்குளம் பகுதி விவசாயிகளுக்கு நெல் பயிரிடும் முன் வழங்கபடும் உர பயிரான சக்க பூண்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது. அதை வழங்கிடவும் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாவும் விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலா் முருகேசன் கூறியது: ஆழ்வாா்திருநகரி ஒன்றிய வேளாண்மைத் துறையினா், விவசாயிகள் பயிரிட்டுள்ள காய்கனிகளுக்கு மானியம் வழங்கி ஆவண செய்யாமல் காலதாமதம் செய்கின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT