பூவுடையாா்புரம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
இக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற பூஜைக்கு கோயில் தா்மகா்த்தாஆதிலிங்கராஜ் தலைமையில் திருவிளக்கு பூஜையை இந்து அன்னையா் முன்னணி ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் பரமேஸ்வரி வழி நடத்தினாா். பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி பக்தி பாடல்கள் பாடி அம்பாளை வழிபட்டனா். பூஜையில் பங்கேற்றவா்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பூவுடையாா் புரம் இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.