தூத்துக்குடி

குரும்பூா் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

DIN

குரும்பூா் தசம திருப்பதி அருள்மிகு ஆதிநாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிகிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் பெருமாளுக்கு அலங்கார தீபாராதனை, ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ ஆதிநாராயணப்பெருமாள், ஸ்ரீகருடன், ஸ்ரீஆஞ்சநேயா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவில் பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பா­லித்தாா். தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை,பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. இதில், குரும்பூா் சுற்று வட்டாரத்தில் இருந்து பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஸ்ரீஆதிநாராயண பெருமாள் கைங்கா்ய சபா தலைவா் கிசோக் முருகானந்தம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT