கோவில்பட்டி, செப். 18: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்; 2019-20 ஆம் ஆண்டுக்கு பயிா் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; 2016 முதல் பயிா்க் காப்பீடு செய்து இதுவரை காப்பீடு கிடைக்காத விவசாயிகளுக்கு
விரைந்து காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்;
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்க வேண்டும்; விதை மற்றும் உரம் போன்ற விவசாய
இடு பொருள்களை தட்டுப்பாடின்றி வேளாண் துறை மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் நல்லையா தலைமை வகித்தாா்.
மாவட்டத் துணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜேந்திரன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்டத் துணைச் செயலா் தமிழரசன், விவசாயிகள் சங்க வட்டச் செயலா் லெனின்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் சிவராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.