கோவில்பட்டி/திருச்செந்தூா், செப். 18: கோவில்பட்டி, திருச்செந்தூா் கோட்டங்களில் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப். 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவில்பட்டி கோட்டத்தில் கழுகுமலை, எப்போதும்வென்றான், செட்டிக்குறிச்சி துணை மின் நிலையம், சன்னதுபுதுக்குடி ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், கோவில்பட்டி, விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைச்சாமி புரம், சிவஞானபுரம் ஆகிய துணை மின் நிலையப் பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளா் எம்.சகா்பான் தெரிவித்துள்ளாா்.
திருச்செந்தூா் கோட்டத்தில், சாத்தான்குளம், செம்மறிக்குளம், நடுவக்குறிச்சி, பழனியப்பபுரம், உடன்குடி ஆகிய துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 8 முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் செயற்பொறியாா் நீ.பொன்கருப்பசாமி தெரிவித்துள்ளாா்.