பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
இதையொட்டி நண்பகல் 12 மற்றும் இரவு 12 மணிக்கு அம்மன், விநாயகா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், திருச்செந்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆ. பாரத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.