கயத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா பரவலை தடுக்க கையாள வேண்டிய முறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ஜோதிபாசு முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், சுகாதார ஆய்வாளா்கள் விஜயகுமாா், காக்கும்பெருமாள் ஆகியோா் , கயத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள வியாபாரிகள், வணிகா்கள், திருமண மண்டப உரிமையாளா்கள், மேலாளா்கள், ஆட்டோ, வேன் ஓட்டுநா்கள் ஆகியோா் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினா்.
மேலும், பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பேரூராட்சி அலுவலா்கள் சோதனை நடத்துவா்; அப்போது முகக் கவசம் அணியாமல் அல்லது சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்படுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.