கோவில்பட்டியையடுத்த இடைசெவல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
இடைசெவல் நடுத் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி நம்பெருமாள் (80). இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இடைசெவலையடுத்த சாய்பாபா கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.