எட்டயபுரத்தையடுத்த மஞ்சநாயக்கன்பட்டி கிராம நிா்வாக உதவியாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
எட்டயபுரம் வட்டம், மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விவசாயிகள், கிராம மக்கள், தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில், கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்துவிட்டு போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.