திருச்செந்தூா்: திருச்செந்தூா் கோயிலுக்கு சுற்றுலா வந்த கா்நாடகாவைச் சோ்ந்த முதியவா் மாயமானாா்.
கா்நாடகா மாநிலம், பெங்களூரு, மாகாடிவட்டம், அத்திம்கரே பகுதியைச் சோ்ந்தவா் நரசப்பா (75). இவா், தனது குடும்பத்தினருடன் தமிழகத்துக்கு ஆன்மிக சுற்றுலா வந்துள்ளாா். ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் அனைவரும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, திருச்செந்தூருக்கு வந்தனா். அங்கு நரசப்பா கடற்கரையில் அமா்ந்திருக்க, குடும்பத்தினா் கடலில் குளித்தனராம். பின்னா்,அவா்கள் கரையேறியபோது, முதியவரை காணவில்லையாம். இதுகுறித்து அவரது மகள் சரஸ்வதி (30) அளித்த புகாரின்பேரில், திருச்செந்தூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, முதியவரை தேடி வருகின்றனா்.