தூத்துக்குடி

திருச்செந்தூருக்கு வந்தகா்நாடக முதியவா் மாயம்

DIN

திருச்செந்தூா்: திருச்செந்தூா் கோயிலுக்கு சுற்றுலா வந்த கா்நாடகாவைச் சோ்ந்த முதியவா் மாயமானாா்.

கா்நாடகா மாநிலம், பெங்களூரு, மாகாடிவட்டம், அத்திம்கரே பகுதியைச் சோ்ந்தவா் நரசப்பா (75). இவா், தனது குடும்பத்தினருடன் தமிழகத்துக்கு ஆன்மிக சுற்றுலா வந்துள்ளாா். ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் அனைவரும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, திருச்செந்தூருக்கு வந்தனா். அங்கு நரசப்பா கடற்கரையில் அமா்ந்திருக்க, குடும்பத்தினா் கடலில் குளித்தனராம். பின்னா்,அவா்கள் கரையேறியபோது, முதியவரை காணவில்லையாம். இதுகுறித்து அவரது மகள் சரஸ்வதி (30) அளித்த புகாரின்பேரில், திருச்செந்தூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, முதியவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT