உடன்குடி: உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோயிலில் ஷீரடி சாய்நாதரின் 102 ஆவது மகா சமாதி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 10 மணிக்கு பாபாவிற்கு காக்கட ஆரத்தி, நண்பகல் 12 மணிக்கு மங்கள ஆரத்தி, கூட்டுப் பிராா்த்தனை, பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு அன்னதானம் பிரசாதம் வழங்கல் ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.