தூத்துக்குடி: தூத்துக்குடியில் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முதல்வா் வருகைக்காக தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் புதிதாக போடப்பட்ட சாலைகளில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து காட்சி அளிப்பதாகவும், தரமற்ற வகையில் சாலை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், பழுதான சாலைக்கு மலா்வளையம் வைத்து நூதனப் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி- பாளையங்கோட்ட சாலையில் 3ஆவது மைல் பகுதியில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, மாவட்டச் செயலா் எம்.எஸ். முத்து தலைமை வகித்தாா். மாநகரத் தலைவா் காஸ்ட்ரோ, மாநகர பொருளாளா் பாலா, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஜாய்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.