உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சியில் பெண் குழந்தைகள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் க. பாலமுருகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் மு.செல்வகுமாா்(செட்டியாபத்து), கணேசன்(குலசேகரன்பட்டினம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
18 வயதுக்குள்பட்ட பெண்குழுந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், பள்ளி இடைநிறுத்தம், தெருவோர குழந்தைகள், பாலியல் துன்புறுத்தல் போன்றவைகளில் இருந்து விடுபட மேற்கொள்ளவேண்டியவை குறித்த ஆலோசிக்கப்பட்டது.
இப்பிரச்னைகளில் இருந்து விடுபட 24 மணி நேரமும் செயல்படும் சைல்டு லைன்-1098 எண் குறித்து விளக்கப்பட்டது. சமூக நல அலுவலா் அழகு விசாலாட்சி நன்றி கூறினாா்.