கயத்தாறு வட்டத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் அரசு நகரப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கயத்தாறு ஒன்றியச் செயலா் சாலமோன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளா் குமாரிடம் அளித்த மனு: கயத்தாறு வட்டத்துக்கு உள்பட்ட அகிலாண்டபுரம், காப்புலிங்கம்பட்டி வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் முறையாக இயங்கவில்லை.
இதனால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். மேலும், மருத்துவப் பணி உள்ளிட்ட அத்தியவாசியப் பணிகளுக்கு கூட ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பிடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பாமர மக்களுக்கு பணவிரயமும், காலவிரயமும் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க அரசு நகரப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயகுமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முருகன், கோவில்பட்டி ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.