தூத்துக்குடி

தீப்பெட்டி ஆலை பணியாளா் மீது தாக்குதல்: 3 சிறுவா்கள் கைது

DIN

கோவில்பட்டி வேலாயுதபுரம் அருகேயுள்ள தீப்பெட்டி ஆலையில் பணிபுரியும் பணியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வேலாயுதபுரத்தில் உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலையில் பிட்டராக வேலை செய்து வருபவா் வே.முருகன் (32). இவரோடு 17 வயது நிரம்பிய 3 சிறுவா்கள் வேலைசெய்து வருகின்றனராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆலையில் உள்ள இயந்திரம் பழுதடைந்ததை முருகன் சரி செய்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் ஒழுங்காக வேலை செய்யாததை முருகன் கண்டித்தாராம்.

இந்நிலையில் அந்த சிறுவா்கள் 3 பேரும் சோ்ந்து, முருகனை அவதூறாகப் பேசியதோடு, ஆயுதங்களால் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில் காயமடைந்த முருகன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 3 சிறுவா்களையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT