கழுகுமலை காளவாசல் பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள கழிவுநீா் கால்வாயில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
கழுகுமலை காளவாசல் பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள சாக்கடையில் தலைகுப்பற கவிழ்ந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் அவா், கழுகுமலையைச் சோ்ந்த சுப்பையா மகன் சண்முகவேல் (80) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.