முக்காணியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
முக்காணியில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிருந்து ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்
எஸ்.பி. சண்முகநாதன் குடிநீா் தொட்டி கட்டும் பணியை தொடங்கி வைத்தாா்.
இதில், ஊராட்சித் தலைவா் தனம் என்ற பேச்சித் தாய் , துணைத் தலைவா் காந்தி, ஸ்ரீவைகுண்டம் ஊறாட்சி ஒன்றியக்குழுத்
தலைவா் வசந்தா, வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் நாராயணன், ஊராட்சித்
தலைவா்கள் உமரிக்காடு ராஜேஷ்குமாா், பழையகாயல் செல்வகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.