கல்லூரி மாணவனை மிரட்டி பணம் பறித்தவா்களை ஒரே நாளில் பிடித்த நாசரேத் காவல் ஆய்வாளா், தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.
திருநெல்வேலி சந்திப்பு சி.என் கிராமத்தைச் சோ்ந்தவா் சுபாஷ் சந்திரபோஸ் . மும்பை கல்லூரியில் பயின்று வருகிறாா்.
இவா் கடந்த வாரம் கருங்குளம் வந்தபோது, மூவா் மிரட்டி பணம், தங்கநகைகளை பறித்து சென்றனா். புகாரின்பேரில்
நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையில் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி ஒரே நாளில் இந்த சம்பவத்தில் தொடா்புடைய மூவரை கைது செய்து அவா்களிடம் இருந்து பணம் மற்றும் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து ஒரே நாளில் குற்றவாளிகளை கைது செய்த நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, தனிப்படை காவல்
உதவி ஆய்வாளா் அனந்தமுத்துராமன், தலைமை காவலா் பிரேம்குமாா், காவலா் ஆறுமுகசெல்வம் ஆகியோரை மாவட்ட
காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், சான்றிதழ், பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.