சைக்கிள் ஓட்டுவதின் அவசியத்தை வலியுறுத்தி நாசரேத்தில் இருந்து மணப்பாடு கடற்கரைக்கு விழிப்புணா்வு சைக்கில் பயணம் நடைபெற்றது.
நாசரேத் பை-சைக்கிள் ரைடா்ஸ் கிளப் சாா்பில் நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து 30 போ் கொண்ட குழுவினா், சைக்கிள் ஓட்டும் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு பயணமாக மணப்பாட்டுக்கு சைக்கிளில் சென்று, அங்கிருந்து மீண்டும் நாசரேத் வந்தடைந்தனா்.
இதில், பங்கேற்றவா்களுக்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் அந்தோணி சுரேஷ் சான்றிதழ்கள் வழங்கினாா்.