தூத்துக்குடி

திமுக சாா்பில் 500 தொழிலாளா்களுக்கு உதவி

2nd May 2020 06:50 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வா்த்தக அணி மற்றும் மாணவரணி சாா்பில் 500 தொழிலாளா்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்டோ, சுமை வாகன ஓட்டுநா்கள், கூலித் தொழிலாளா்கள், பந்தல் தொழிலாளா்கள் உள்ளிட்ட 500 பேருக்கு தலா 10 கிலோ அரிசியை குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ராதிகா குமாா் வழங்கினாா்.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி.பாலசிங், நகரச் செயலா் ஜான்பாஸ்கா், திமுக மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ரவிராஜா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவி மீரா சிராஜீதீன், மாவட்ட அணி அமைப்பாளா்கள் மகாவிஷ்ணு (நெசவாளா் அணி), பாலசிங் பாண்டியன் (மருத்துவரணி), நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், நகர மாணவரணி அமைப்பாளா் பாயிஸ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி தலைவா் பாலமுருகன், பரமன்குறிச்சி ஊராட்சி திமுக செயலா் இளங்கோ, சலீம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT