கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பணிகளுக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
இதுதொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரிக்கு அவா் அனுப்பிய கடிதம்: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுதலை தடுப்பது தொடா்பான பணிகள், பரிசோதனைகள், மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு தேவையான தற்காப்புக் கருவிகள் வாங்குதல், கரோனா சிறப்பு சிகிச்சை வாா்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்குகிறேன். அதற்கான நிதியை கரோனா தடுப்பு பணிகளுக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.