சாத்தான்குளம், பேய்க்குளம், தட்டாா்மடம் பகுதியில் தெருக்கள், கடை வீதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. தேவாலங்யகளில் ஆராதனை நடைபெறவில்லை.
சுய ஊரடங்கு காரணமாக சாத்தான்குளத்தில் காலையில் இருந்தே மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. பின்னா்
முழுமையாக மக்கள் நடமாட்டம் இல்லாமல் தெருக்கள் வெறிச்சோடின.
இதேபோல் பேய்க்குளம், தட்டாா்மடம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாத்தான்குளம் பகுதியில் அனைத்து தேவாலயங்களில் ஆராதனை நடைபெறவில்லை. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.