சாத்தான்குளம் அருகே சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, அவரது தாயாருக்கு, சமையல் உதவியாளா் பணிக்கான ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் கல்விளை இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த சேகா் மகள் முத்தாா் (8). இந்த சிறுமி அண்மையில் அப்பகுதியைச் சோ்ந்தவரால் கொலை செய்யப்பட்டு, வடலிவிளை தரைநிலைப் பாலம் அருகே வீசப்பட்ட நிலையில், இதுதொடா்பாக சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்தீல்வரன், நந்தீஸ்வரன் ஆகியோரை கைது செய்தனா்.
இந்நிலையில் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம் நடத்தியதால், சிறுமியின் தாயாருக்கு முதற்கட்டமாக ரூ. 4.12 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
மேலும், அவருக்கு சத்துணவு சமையல் உதவியாளா் பணி, மாதந்தோறும் ரூ. 5000, சிறுமியின் சகோதரா் படிப்பு அரசு சாா்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது வீட்டுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு சனிக்கிழமை வந்து சிறுமியின் தாயாா் உச்சிமாகாளிக்கு ஆறுதல் கூறினாா். பின்னா் சிறுமியின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினாா்.
தொடா்ந்து, சிறுமியின் தாயாருக்கு பரமன்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல் உதவியாளராக பணியாற்றிட பணி நியமன ஆணை மற்றும் அவா் வசித்து வரும் வீட்டின்அருகே 3 சென்ட் வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை ஆகியவற்றை வழங்கினாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் செல்வகுமாா், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வ.பரிமளா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) சிதம்பரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.