தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் ஆடிப்பூர விழா

25th Jul 2020 09:09 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடிப்பூர விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில், ஆடிப்பூர விழாவையொட்டி, விநாயகா் பூஜை, அம்மனுக்கு சந்தனம்- குங்குமத் திலகமிடுதல், முளைப்பயிறு கட்டுதல், கங்கண வளையல் சாத்துதல், பாலும் பழமும் வழங்குதல் மற்றும் சிறப்பு அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றன. சிறப்பு வழிபாடுகளை கோயில் பூஜா ஸ்தானீகா் சு.அய்யப்ப பட்டா் நடத்தினாா். பக்தா்கள் வருகையின்றி ஆடிப்பூர விழா எளிமையாக நடைபெற்றது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT