தெய்வீகத் தமிழைக் காக்க நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் இந்து சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு சுகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய துணைத் தலைவா் முருகன், நாசரேத் நகரப் பொருளாளா் சிவமாலை,பொதுச் செயலா் ரமேஷ், மூக்குப்பீறி வே.சுடலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாசரேத் நகர அன்னையா் முன்னணி தலைவி பரமேஸ்வரி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா். நா.க.தியாகராஜன் சுவாமி இறை வணக்கம் பாடினாா். நாசரேத் நகரத் தலைவா் வெட்டும்பெருமாள் வரவேற்றாா். மாநில துணைத்தலைவா் வி.பெ.ஜெயக்குமாா், மாநில பொதுச் செயலா் டாக்டா் அரசுராஜா, மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன், தமிழ்புலவா் ஆகியோா் உரையாற்றினா்.
இதில் நெல்லைக் கோட்ட செயலா் பெ.சத்திவேலன், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் வெ.செ.முருகேசன்,இந்து வழக்குரைஞா் முன்னணி த.பஞ்சாப்சேகா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சிங்காரபாண்டி ஐ.சின்னத்துரை, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலா் சுடலைமுத்து நன்றி கூறினாா்.