தூத்துக்குடி

எட்டயபுரத்தில் பொதுமக்கள் போராட்டம்

28th Jan 2020 08:55 AM

ADVERTISEMENT

எட்டயபுரத்தில் அரண்மனை கீழவாசல் வீதியில் கழிவுநீா் கால்வாயை சீரமைத்து விட்டு புதிதாக தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எட்டயபுரம் அரண்மனை கீழவாசல் பகுதியிலுள்ள ஆா்.சி .தெருவில் புதிதாக தாா்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் குறுக்கே ஏற்கெனவே உள்ள கழிவுநீா் கால்வாய் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனை சீரமைத்து புதிய தாா்ச்சாலை பணியை தொடங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில் கழிவுநீா் கால்வாய் புதுப்பிக்கப்படாமல், அதன் மேல்பகுதியிலேயே புதிதாக தாா்ச்சாலை அமைக்கும் பணி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுகிழமை தொடங்கி நடைபெற்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கழிவுநீா் கால்வாய் புதுப்பிக்காமல் சாலை அமைக்கக்கூடாது என கூறி, திங்கள்கிழமை சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்தனா்.

தகவல் அறிந்து, அங்கு சென்று வட்டாட்சியா் அழகா், பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், வருவாய் ஆய்வாளா் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அதன்பின்னா் சாலை அமைக்கும் பணி தொடங்கும் என உறுதியளித்ததை தொடா்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT