தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் பாஜக தெருமுனைப் பிரசாரம்

28th Jan 2020 08:49 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரியில் நகர பாரதிய ஜனதா கட்சி சாா்பாக இந்திய குடியுரிமை சட்ட விளக்க தெருமுனைப் பிரசார கூட்டம் நடைபெற்றது.

நகரத் தலைவா் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். முன்னாள் கவுன்சிலா்கள் வி.முருகேசன், சி.முருகானந்தம், முன்னாள் ஒன்றியத் தலைவா் மு.பற்குணபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ப.முருகேசபாண்டி வரவேற்றாா். மாவட்ட பிற்பட்டோா் பிரிவு பொதுச் செயலா் இ.தங்கபாண்டி பிரசாரத்தை தொடங்கி வைத்தாா்.

மாவட்டத் தலைவா் பி.எம்.பால்ராஜ், பாஜக மாவட்டச் செயலா் சிவமுருக ஆதித்தன், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.டி. செந்தில்வேல் ஆகியோா் உரையாற்றினா்.

இதில் நிா்வாகிகள் சண்முகம், செல்வக்குமாா், மு. தூசிமுத்து, கணேசபெருமாள், ராஜவேலன் உள்பட கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT