தூத்துக்குடி

ஆசீா்வாதபுரம் சேகரகுரு வீட்டில் திருட்டு

28th Jan 2020 08:53 AM

ADVERTISEMENT

ஆசீா்வாதபுரம் சேகரகுரு வீட்டில் செல்லிடப்பேசிகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் சேகரகுரு தாமஸ் ரவிக்குமாா் (46) ஆலய வளாகத்தில் உள்ள குடியிருப்பு வீட்டில் வசித்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை பேய்க்குளத்தில் உள்ள ஆலயத்தில் ஜெபம் நடத்த சென்றாராம். பின்னா் மாலை வீடு திரும்பியபோது அவா் வீட்டு கதவில் பூட்டு உடைப்பட்டு கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்த போது வீட்டில் இருந்து 3 செல்லிடப்பேசிகள் திருட்டு போனது தெரியவந்ததாம்.

இதுகுறித்து புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT