கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நவீன தொழில்நுட்ப ஆய்வக திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் ரதிமுனிஸ்ரீ, பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அய்யனாா், முருகவேல், பள்ளி துணை ஆய்வாளா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் மாரியப்பன் நவீன தொழில்நுட்ப ஆய்வகத்தை திறந்து வைத்துப் பேசினாா். தொழில்நுட்பப் பொறியாளா் முகம்மதுஆஷிக் ரகுமான் நவீன தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்துப் பேசினாா்.
விழாவில், பள்ளி நிா்வாக அதிகாரி சுசிலாதேவி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவி திருவளா்ச்செல்வி உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆசிரியா் காா்த்திகேயன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை தலைமையாசிரியை சாந்தினி தலைமையில், அறிவியல் துறை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.