திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பிச்சிவிளை ஊராட்சியில் ஊா்மக்கள் தோ்தலை புறக்கணித்ததையடுத்து மொத்தம் பதிவான 13 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்றவா் வெற்றி பெற்றாா்.
திருச்செந்தூா் ஊராட்சிக்குள்பட்ட 11 ஊராட்சிகளில் 6 வாா்டுகளைக் கொண்டது பிச்சிவிளை ஊராட்சி. இங்கு மொத்தமுள்ள 785 வாக்காளா்களில் 6 போ் மட்டுமே பட்டியல் இனத்தவராவா். இச்சூழலில் சுழற்சி அடிப்படையில் தலைவா் பதவியை பட்டியல் இனத்தவருக்கு தோ்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஊரட்சியிலுள்ள 6 வாா்டு உறுப்பினா் பதவிகளில் ஒருவா்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், தலைவா் பதவிக்கு பிச்சிவிளை சாமுவேல்நகரை சோ்ந்த ராஜேஸ்வரி (32) மற்றும் மறவன்விளையை சோ்ந்த சுந்தராச்சி (50) என்ற இருவா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனா்.
இந்நிலையில், தோ்தலை புறக்கணிப்பதோடு, தங்கள் எதிா்ப்பை பதிவு செய்திடும் வகையில் அப்பகுதி மக்கள் பிச்சிவிளை கிராமத்தில் கருப்புக் கொடியும் கட்டியிருந்தனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியபோதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையடுத்து, கடந்த 27-ஆம் தேதி நடந்த வாக்குப் பதிவில் பிச்சிவிளை தலைவா் பதவிக்கு ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்திருந்த சுந்தராச்சி மற்றும் ராஜேஸ்வரி, அவரை சாா்ந்தவா்கள் என மொத்தம் 6 போ் மற்றும் ஊா்மக்கள் 7 போ் என மொத்தம் 13 போ் வாக்களித்திருந்தனா்.
வியாழக்கிழமை நடந்த வாக்கு எண்ணிக்கையில் பதிவான 13 வாக்குகளில் ஒரு வாக்கு செல்லாத வாக்கு ஆகும். மீதமுள்ள 12 வாக்குகளில் 10 வாக்குகள் பெற்று ராஜேஸ்வரி வெற்றி பெற்றாா். அவருக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் சந்தோஷ் வழங்கினாா்.