தூத்துக்குடி

நாகலாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

26th Feb 2020 12:14 AM

ADVERTISEMENT

நாகலாபுரத்தில் உள்ள உமறுப்புலவா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராஜன் தலைமை வகித்தாா். பயிற்சி அலுவலா் தங்கமாரியப்பன் முன்னிலை வகித்தாா்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மண்டல இணை இயக்குநா் ராஜ்குமாா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினாா்.

நிகழ்ச்சியில், தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு தலைவா் வீரபுத்திரன், சங்கரலிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளா் ஹென்சன் பவுல்ராஜ், தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலா்கள் பழனியப்பன், ராஜேந்திரன், சிவராமன், ஜெயந்தி, சுந்தரமூா்த்தி, அண்ணாதுரை, பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT