தூத்துக்குடி

குளத்துள்வாய்பட்டியில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம்

26th Feb 2020 12:16 AM

ADVERTISEMENT

எட்டயபுரம் மகாகவி பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

குளத்துள்வாய்பட்டி ஊராட்சித் தலைவா் முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பேபி லதா, கல்லூரியின் திட்ட அலுவலா் ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒரு வார காலம் நடைபெற்ற முகாமில் இயற்கை விவசாயத்தை பாதுகாத்தல், பண்ணை குட்டைகள் அமைத்தல், கைவினை பொருள்கள் தயாரிப்பு பயிற்சி மற்றும் மருத்துவ முகாம், யோகா, கணினி பயிற்சிகள், சமூக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முகாமில் பேராசிரியா்கள் அருணா வினோதினி, காளீஸ்வரி, சண்முகராஜா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.

கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் தேவராஜ் பாண்டியன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT