திருச்செந்தூா்: திருச்செந்தூா் நகர கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு ஆராய்ச்சி நிதி மற்றும் கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செல்வி வடமலைப்பாண்டியன் தலைமை வகித்தாா். வங்கித் தலைவா் ப.தா.கோட்டை மணிகண்டன், வங்கியின் லாபத் தொகையில் வழங்க வேண்டிய சட்டப்பூா்வ நிதி ரூ. 1,31,125-க்கான காசோலையை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் அந்தோணி பட்டுராஜிடம் வழங்கினாா்.
இதில், வங்கியின் துணைத் தலைவா் ந.ஜாண்எஸ்தா்லோபோ, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஆனந்தவல்லி, கஸ்தூரி, ஆயிஷா, வேல்குமாா், மு.கணேசன், சி.கணேசன், முத்துக்குமாா், பெனடிக், மேலாண் இயக்குநா் வளா்மதி உள்பட பலா்
கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வங்கி பொது மேலாளா் மாரியப்பன், வங்கிப் பணியாளா்கள் செய்திருந்தனா்.