திருச்செந்தூா் : திருச்செந்தூா் அரிஸ்டோகிரேட்ஸ் ஆங்கிலப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
திருச்செந்தூா் மண்டல துணை வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், பொறியாளா் கி.நாராயணன், கல்லூரி பேராசிரியை சிந்துஜா ஆகியோா் கல்வி மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினா்.
தொடா்ந்து மாணவா்களின் யோகா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தாளாளா் சுஜாதா சரவணன் ஆண்டறிக்கை வாசித்தாா். ஆலோசகா் மு.சரவணன் வரவேற்றாா். ஆசிரியை பேச்சியம்மாள் நன்றி கூறினாா்.