தூத்துக்குடி

விருது பெற்ற நீதிமன்ற காவலருக்கு பாராட்டு

2nd Feb 2020 10:34 PM

ADVERTISEMENT

குடியரசு தினத்தன்று முதல்வரிடம் விருது பெற்று திரும்பிய சாத்தான்குளம் நீதிமன்ற காவலரை நீதிபதி சரவணன் பாராட்டினாா்.

சாத்தான்குளம் நீதிமன்றப் பணி காவலராக பணிபுரிந்து வரும் காவலா் சாமதுரைக்கு, குடியரசு தினத்தன்று தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி விருது வழங்கினாா். விருது பெற்ற காவலா் சாமதுரை, சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்துக்கு சனிக்கிழமை வருகை தந்தாா். அவரை சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதி சரவணன் வரவேற்று பாராட்டு தெரிவித்தாா்.

அப்போது, வழக்குரைஞா்கள் ராம்சேகா், கல்யாண்குமாா், வேணுகோபால், தியோனிஷ் சசிமாா்சன், சுரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT