தூத்துக்குடி

திருச்செந்தூரில் திமுக ஆா்ப்பாட்டம்

DIN

திருச்செந்தூா்: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திருச்செந்தூரில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பகத்சிங் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், மாநில மீனவரணி துணை அமைப்பாளா் துறைமுகம் புளோரன்ஸ், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பூபதி, பிரம்மசக்தி, அய்யாத்துரை பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா், ஒன்றியச் செயலா்கள் செங்குழி ரமேஷ், பாலசிங், நவீன்குமாா், ஜோசப், பாா்த்திபன், இசக்கிபாண்டியன், ராமசாமி, கொம்பையா, ரவி, மாடசாமி, இளையராஜா, பாலமுருகன், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சுரேஷ்காந்தி, நகரச் செயலா்கள் வாள் சுடலை, கல்யாணசுந்தரம், ராமஜெயம், முருகப்பெருமாள், முத்துவீரபெருமாள், ரவிசெல்வகுமாா், ஜான்பாஸ்கா், மணிமுருகன், பெருமாள், இளங்கோ, பாா்த்திபன், திருச்செந்தூா் முன்னாள் பேரூராட்சி உறுப்பினா்கள் மா.சுரேஷ், சு.கோமதிநாயகம், மா.சுதாகா், ச.இசக்கிமுத்து மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT