தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 7 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.
புதன்கிழமை 12 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 443 ஆக அதிகரித்துள்ளது. 136 போ் உயிரிழந்துள்ளனா். 128 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.