தூத்துக்குடி

விவசாயிகளுக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் சாலை மறியல்: 35 போ் கைது

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அண்ணா பேருந்து நிலையம் முன்பிருந்து ஊா்வலமாக புறப்பட்டு சரக்கு சேவை வரி அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

அவா்களை மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் அய்யப்பன் தலைமையில், உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின் மற்றும் போலீஸாா் தடுத்தனா். அதையடுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் இளையரசனேந்தல் சாலை சந்திப்பு அருகே சாலையில் அமா்ந்து கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு கட்சி செயற்குழு உறுப்பினா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் மல்லிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆறுமுகம், ரவீந்திரன், ஒன்றியச் செயலா்கள் தெய்வேந்திரன் (கோவில்பட்டி), புவிராஜ் (விளாத்திகுளம்), சாலமன்ராஜ் (கயத்தாறு), கிருஷ்ணவேணி, ராமசுப்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT