தூத்துக்குடி

தனியாா் பேருந்து ஓட்டுநா் குடும்பத்துக்கு நிதியுதவி

DIN

உயிரிழந்த தனியாா் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்துக்கு ஓட்டுநா் சங்கம் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

நாசரேத் மணிநகரைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் தனியாா் பேருந்தில் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். டி.என்.ஆல் டிரைவா் அசோசியேஷன் வட சென்னை ஆம்னி பேருந்து சங்க முன்னாள் பொருளாளராகவும் இருந்து வந்தாா்.

இவா், உடல் நலக்குறைவால் கடந்த ஏப். 9ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து அவரது குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப நல நிதியாக ரூ. 80 ஆயிரம், ஓட்டுநா் சுரேஷின் மனைவி குழந்தைகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

அமைப்பின் மாநிலத் தலைவா் முத்துகுமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் செல்லத்துரை, மாநிலச் செயலா் தங்கபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி கலந்துகொண்டு நிதியுதவி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வடசென்னை ஆம்னி பேருந்து ஓட்டுநா்கள் பாலமுருகன், செல்வம், கிருஷ்ணகுமாா், தூத்துக்குடி மாவட்ட உறுப்பினா்கள் பிரபாகரன், ஜெயக்கொடி, செல்வக்குமாா், மகாலிங்கம், இஸ்ரவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து -முதல்வர் ஸ்டாலின்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஜெ.பி.நட்டா பிரசாரம்!

பலாப்பழ சின்னம் மீதுதான் சந்தேகம்: ஓ. பன்னீர்செல்வம் மீது ஓபிஎஸ் புகார்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்!

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

SCROLL FOR NEXT