ஸ்ரீவைகுண்டம்: வெடிகுண்டு வீச்சில் மரணமடைந்த காவலா் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவியை கனிமொழி எம்.பி. செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
வல்லநாடு அருகே உள்ள மணக்கரை பகுதியில் ரெளடி துரைமுத்துவைப்
பிடிக்க சென்றபோது வெடிகுண்டு வீச்சில் காவலா் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பலியானாா்.
இந்நிலையில், பண்டாரவிளையில் உள்ள காவலா் சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்ற கனிமொழி எம்.பி., அவரது மனைவி புவனேஷ்வரியிடம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ரூ. 2லட்சம் நிதியுதவியை வழங்கினாா்.
பின்னா் அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினாா்.
இதைத்தொடா்ந்து, காவலா் சுப்பிரமணியன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அப்போது, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சுந்தரராஜன், ஒன்றியச் செயலா்கள் கொம்பையா, ரவி, நகரச் செயலா் சுடலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
எஸ்.பி. ஆறுதல்: இதேபோல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் , காவலா் சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.